அன்புடையீர் !
வணக்கம்.
சிந்தனைப் புகார் என்ற இந்த மின்னூல் வழியாக உங்களோடு சிந்தனை பகிர்வதில் நான் மகிழ்கிறேன். மற்றவர் மகிழ்வை என் மகிழ்வாக எண்ணுபவன் நான்.
ஆகவே தயக்கம் இல்லாமல் இம்மின்னூலை படிக்கலாம். அதற்கு இரு பார்வை கொண்டு அழைக்கிறேன்.
இந்நூல் சிந்தனை சிகிச்சை என்ற தலைப்பில் தமிழ்த்தோட்டம் (wwww.tamilthottam.in) இணையதளத்தில் வெளிவந்தவைகள்.
இந்நூலை சுற்றுசூழலாகிய அன்னை, சுற்றத்தாராகிய நீங்கள், இறைவன், என்னை பெற்ற தந்தை குழந்தை சாமி, என் அன்புக்குரிய மனைவி ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன்.
இதை வெளியிட காரணமான தமிழ்த்தோட்ட அன்பர்கள், மதிப்பிற்குரிய யூஜின் புரூஸ், கவியருவி ம. ரமேஷ், கலை நிலா, Free Tamil e-books இணையதாரர்கள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
நான் தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் பணிப்புரிகிறேன்.
இந்நூலின் நோக்கம் சமுதாய கண்ணாடியாக இது உருவாக வேண்டும்.
இந்நூலின் கருத்துகளை நான் சர்வாதிகாரமாக பயன்படுத்த விரும்பவில்லை. குறைகளை கவனியுங்கள். தங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.
நன்றியுடன்
ராஜ்-கே ராஜேந்திரன்